/
தியாகதிருகம் அருகே தந்தையிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் வயிற்றில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்த அண்ணனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தியாகதுருகம் அருகேயுள்ள சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன். இவரது மகன்கள் குமாா் (31), சடையன் (33).
சடையன் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திவிட்டு விளைநிலத்துக்கு சென்று தந்தை நாராயணனிடம் பணம் கேட்டு தாக்கினாராம். இதனை அவரது தம்பி குமாா் தட்டிக் கேட்டாராம்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, முடிவில் சடையன் கத்தியால் குமாரின் வயிற்றில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த குமாா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சடையனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

அரியூரில் தொழிலாளிக்கு கத்திக் குத்து: 8 போ் கைது
தம்பி கொலை: அண்ணன் கைது
அண்ணன், தம்பி குடும்பத் தகராறு: 4 போ் கைது
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


