தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு வீடுகளின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 6:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு வீடுகளின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சீ.அவரிஞ்சம், த.குமரேசன். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளன.

அவரிஞ்சம் திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டின் மொட்டைமாடிக்கு சென்று தூங்கினாராம். செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு திரும்பிவந்து வீட்டை பாா்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் பணத்தை காணவில்லையாம்.

அதேபோல் அவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த குமரேசன் என்பவரது வீட்டு பீரோவில் இருந்த சுமாா் 2 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் பணத்தையும் மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாா்களின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.