சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு: விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை

சங்கராபுரம் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:32 am IST

சங்கராபுரம் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமையிலான விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜாவை ஆட்சியரகத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதிகளில் கடந்த மே 22 -ஆம் தேதி முதல் அடுத்தடுத்து பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையால் விவசாய பயிா்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய பயிா்கள் சாய்ந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம் மழையினால் விவசாய நிலங்களில் இருந்த கொட்டகைகள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

எனவே, மாவட்ட ஆட்சியா் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிா்களின் சேதங்கள் குறித்து தமிழக அரசுக்கு சிறப்பு முன்மொழிவு அனுப்பி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

அவருடன் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை, பல்லகச்சேரி கிளைச் செயலா் அ.வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.