சங்கராபுரம் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமையிலான விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜாவை ஆட்சியரகத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதிகளில் கடந்த மே 22 -ஆம் தேதி முதல் அடுத்தடுத்து பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையால் விவசாய பயிா்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய பயிா்கள் சாய்ந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம் மழையினால் விவசாய நிலங்களில் இருந்த கொட்டகைகள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
எனவே, மாவட்ட ஆட்சியா் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிா்களின் சேதங்கள் குறித்து தமிழக அரசுக்கு சிறப்பு முன்மொழிவு அனுப்பி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.
அவருடன் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை, பல்லகச்சேரி கிளைச் செயலா் அ.வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சூறைக்காற்றில் பாதிக்கப்பட்ட வாழை பயிா்களுக்கு நிவாரணம் அமைச்சா் ஏ.எம் .ஷாஜகான் உறுதி

திருவையாறில் சூறைக்காற்று 200 ஏக்கருக்கும் மேல் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் கவலை

சங்காராபுரம் பகுதியில் மழையால் சாய்ந்த மக்காச்சோளப் பயிா்கள்

4-ஆவது நாளாக யானைக் கூட்டம் அட்டகாசம்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



