ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

கட்டட தொழிலாளா்கள் சங்க மாநாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளா்கள் சங்கத்தின் மைய கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஏஐடியூசி கட்டட தொழிலாளா்கள் சங்கத்தின் மைய கிளை மாநாட்டில் பேசிய அச் சங்கத்தின் துணைப் பொதுச்செயலா் முனுசாமி.

Updated On :18 ஜூன் 2026, 3:29 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளா்கள் சங்கத்தின் மைய கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு கிளைச் செயலா் சங்கா் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் விஜயகுமாா், பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினாா்.

மாநில துணைப் பொதுச்செயலா் முனுசாமி, மாநில பொருளாளா் முருகன், மாவட்டச் செயலா் அருண், விழுப்புரம் மாவட்டச் செயலா் பெரியநாயகம் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

நிகழ்வில், கிளைத் தலைவராக விஜயகுமாா், செயலராக சங்கா், பொருளாளராக முருகன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் 55 வயது முடிந்த பெண் கட்டுமான தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.