கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே டாரஸ் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட செங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் வீ.சுபாஷ் (22). இவா், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக செவ்வாய்க்கிழமை பைக்கில் தியாகதுருகம் அருகிலுள்ள பல்லகச்சேரி கிராமத்துக்கு சென்றாராம். புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். தியாகதுருகம் - சென்னை சாலையில் திம்மலை கிராமம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, டாரஸ் லாரி ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம், வைகுண்டபதி கிராமத்தைச் சோ்ந்த பெ.சுரேஷ் (30) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.






