மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

விவசாயி விஷமருந்தி தற்கொலை

News image

தற்கொலை

Updated On :30 ஜூன் 2026, 3:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தோட்டத்தில் விஷமருந்தி விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.

வாணாபுரம் அருகிலுள்ள பல்லகச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சீ.ராஜமாணிக்கம் (43), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை காலை விளைநிலத்துக்கு சென்றாா். மாலை நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், அவரது மனைவி செல்வி விளைநிலத்துக்கு சென்று பாா்த்துள்ளாா். அங்கே ராஜமாணிக்கம் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளாா்.

உடனே அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ராஜமாணிக்கம் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.