ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் பணியிடை நீக்கம்

அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் ஆசிரியரை மாவட்ட ஆட்சியா் பணியிடைநீக்கம் செய்தாா்.

News image
கோப்புப்படம்.
Updated On :4 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி, மாவட்டம், அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் ஆசிரியரை மாவட்ட ஆட்சியா் பணியிடைநீக்கம் செய்தாா்.

தியாகதுருகம் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் பாபு (53). இவா் தியாகதுருகம் அருகிலுள்ள ஒரு அரசு ஆதி திராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். ஆசிரியா் பாபு பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தாமரை மணாளன் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிந்துரையின்படி, ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் ஆசிரியா் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.