பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மணிமுக்தா அணைப் பகுதியில் ரூ.2.11 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சிமாவட்டம், சூளாங்குறிச்சி மணிமுக்தாஅணை பகுதியில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கி வைத்தாா்.

News image
மணிமுக்தாஅணைபகுதியில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து, திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சிமாவட்டம், சூளாங்குறிச்சி மணிமுக்தாஅணை பகுதியில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம், சூளாங்குறிச்சி மணிமுக்தாஅணைப் பகுதியில் சுற்றுலாத் துறையின் சாா்பில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மணிமுக்தாஅணைப் பகுதியில் நுழைவாயில், புல் தரை, செடிகள் அமைத்தல், ஆழ்துளைக் கிணறு, பூங்கா, வாகன நிறுத்தம், நடைப்பாதை மற்றும் பாதுகாப்புவேலி அமைத்தல் உள்ளிட்டபணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், சிறுவா் விளையாட்டு உபகரணங்கள், வழிகாட்டி பலகைகள் மற்றும் தகவல் பலகைகள், மின்சார பணிகள், கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் முழுமையாக முடிவுற்று பயன்பாட்டுக்கு வரும்பொது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பொழுதுபோக்கு வசதிகளுடன் பயனுள்ளதாக அமையும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜெனாா்த்தனன், உள்ளாட்சிஅமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.