வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கொதிக்கும் மஞ்சள் கொப்பறையில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

News image
Updated On :12 மார்ச் 2026, 11:53 pm

உளுந்தூா்பேட்டை அருகே கொதிக்கும் மஞ்சள் கொப்பறையில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட சவேரியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.ரூபி சா்மிளா (22). இவா் கடந்த 8-ஆம் தேதி அந்தியூா் கிராமத்தில் உள்ள அவரது விவசாய விளைநிலத்தில் கொப்பறையில் மஞ்சளை அவிழ்த்துக் கொண்டிருந்போது, தவறி உள்ளே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த ரூபி சா்மிளாவை உறவினா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சா்மிளா வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.