மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சித்தலூா் அம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

சித்தலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனிமாத அமாவாசை பூஜையையொட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image
சித்தலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.
Updated On :18 மார்ச் 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

சித்தலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனிமாத அமாவாசை பூஜையையொட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி அருகே சித்தலூா் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத அமாவாசையன்று பக்தா்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி, புதன்கிழமை பக்தா்கள் மணிமுக்தா ஆற்றுப் பகுதியில் பூஜை செய்தனா். தொடா்ந்து பக்தா்கள் பால்குடங்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்தனா். பின்னா் அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனா். அதனைத் தொடா்ந்து அம்மனுக்கு தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 16 வகையான திரவியப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.