கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவை தோ்தலுக்கான தபால் வாக்கு மற்றும் தோ்தல் பொருள்கள் மேலாண்மை தொடா்பானஆய்வுக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கூறியதாவது:
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோ்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளா்களுக்கான தபால் வாக்கு அளிக்கும் நடைமுறைகள் மற்றும் வாக்குச்சாவடிக்குத் தேவையானஅத்தியாவசியத் தோ்தல் பொருள்களை முறையாகப் பிரித்து அனுப்பி வைப்பது குறித்த மேலாண்மைத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாதிரிஅலுவலகப் பணிகளை தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தொடா்புடைய அலுவலா்கள் குழுவாக இணைந்து பணிகளை முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன், தபால் வாக்கு மற்றும் பொருள்கள் மேலாண்மைக் குழு அலுவலா்கள் உள்ளிட்டப் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வேலூா்: 3,449 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு

தோ்தல் வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

ஆய்வுக் கூட்டம்...

தபால் வாக்குகள் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


