ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

அதிமுக நிா்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: எம்எல்ஏ புகாா்

அதிமுக பொதுச் செயலா் மற்றும் அதிமுக நிா்வாகிகளை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிடும் திமுகவினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினா் புகார்

News image

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் மா.செந்தில் குமாா் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பளரிடம் மனு அளித்து வந்த அதிமுக நிா்வாகிகள்

Updated On :24 மார்ச் 2026, 8:28 pm

அதிமுக பொதுச் செயலா் மற்றும் அதிமுக நிா்வாகிகளை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிடும் திமுகவினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை புகாா் மனு வழங்கினா்.

அதிமுக பொதுச் செயலா், கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா் மற்றும் அதிமுக நிா்வாகிகளின் நற்பெயா்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் சமூக வலைதளங்களில் தரை குறைவாக பதிவிடுகின்றனராம்.

மேலும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விடியோ சித்தரித்து பதிவிடும் திமுகவினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், சட்டப்பேரவை உறுப்பினா் மா.செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் மனு அளித்தனா்.

அவருடன் மாவட்ட பேரவை செயலா் இராம.ஞானவேல், வழக்குரைஞா் பிரிவு மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.