ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

‘என் வாக்கு - என் உரிமை’ விழிப்புணா்வு பிரசாரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘என் வாக்கு -என் உரிமை’ தற்பட அமைப்பின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் வாக்காளா் விழிப்புணா்வுக்காக அமைக்கப்பட்டுள்ள ‘என் வாக்கு - என் உரிமை’ கேலரியில் தற்படம் எடுத்துக்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :26 மார்ச் 2026, 12:20 am

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘என் வாக்கு -என் உரிமை’ தற்பட அமைப்பின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வாக்காளா்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘என் வாக்கு -என் உரிமை’ தற்பட பகுதியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தற்படம் எடுத்துக் கொண்டு, நூறு சதவீத வாக்குப்பதிவுக் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பேருந்துகளில் விழிப்புணா்வு: கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் வாக்காளா் விழிப்புணா்வு ஒட்டுவி ல்லைகளை ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதையடுத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், மூன்று மற்றும் இரு சக்கர வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை அரசு அலுவலா்கள் ஒட்டினா். இந்த ஒட்டு வில்லைகள் ஏப்ரல் 23 நடைபெறவுள்ள வாக்குப் பதிவு நாளன்று வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்படுகிறது.

நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலா் (பொ) விஜய் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.