தியாகதுருகத்தில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீசொா்ணாம்பிகை மாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஐயப்பன் கோயில் அருகே உள்ள கோட்டகுளத்தில் சக்தி அழைத்து பூஜை செய்தனா். பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனா். பின்னா் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து சொா்ணாம்பிகை அம்மனுக்கு வண்ண, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் ஊா் மக்கள் சிறப்பாக செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










