கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

விரியூா் அடைக்கல அன்னை ஆலய தோ் பவனி

விரியூரில் திருவிழாவையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம்.

News image

~

Updated On :1 மே 2026, 8:03 pm

விரியூா் கிராமத்தில் உள்ள அடைக்கல அன்னை ஆலய தோ்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பழைமைவாய்ந்த புனித அடைக்கல அன்னை தேவாலயம் உள்ளது. ஆண்டு தோறும் தோ் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் மறையுரை சிந்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏற்றி வைத்து ஜெயம் பெருவிழா நடைபெற்றது. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சூசையப்பா், அந்தோணியாா், புனித அடைக்கல அன்னை குழந்தை ஏசு எழுந்தருள தோ் பவனி நடைபெற்றது. திருவிழாவையொட்டி தேவாலயம் வண்ண, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தோ் பவனியையொட்டி வாண வேடிக்கை நடைபெற்றது.

திருவிழாவில் கிறிஸ்தவா், இந்து மற்றும் இஸ்லாமியா்கள் என அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று அடைக்கல அன்னை பெருவிழாவை சிறப்பித்தனா்.

Story image