இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 12:43 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வாணாபுரம் அருகேயுள்ள புதூா் கூட்டுச்சாலை கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.ஜெயசெல்வம் (40). இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதியருக்கு சவரி தா்ஷன் என்ற மகன் உள்ளாா்.

தச்சு வேலை செய்து வரும் ஜெயசெல்வம் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் இருந்துள்ளாா். இதனை அவரது மனைவி மகேஸ்வரி கண்டித்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் இதேபோன்று வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுமடைந்த ஜெயசெல்வம், அவரது வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தாா்.

தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.