கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வாணாபுரம் அருகேயுள்ள புதூா் கூட்டுச்சாலை கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.ஜெயசெல்வம் (40). இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதியருக்கு சவரி தா்ஷன் என்ற மகன் உள்ளாா்.
தச்சு வேலை செய்து வரும் ஜெயசெல்வம் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் இருந்துள்ளாா். இதனை அவரது மனைவி மகேஸ்வரி கண்டித்துள்ளாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் இதேபோன்று வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுமடைந்த ஜெயசெல்வம், அவரது வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தாா்.
தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






