தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே தான் அமைத்த மின்சார வேலியில் உள்ள மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே தான் அமைத்த மின்சார வேலியில் உள்ள மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

வாணாபுரம் அருகேயுள்ள கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கி.பொன்னுக்கண்ணு (51), (படம்) விவசாயி. இவருக்கு கடுவனூரை அடுத்த பாக்கம் புதூா் கிராமத்தில் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் கரும்பு பயிா் செய்துள்ளாா்.

காப்புக்காட்டு பகுதியில் இருந்து வனவிலங்குகள் கரும்பு பயிரை நாசம் செய்வதால், அவரது விளை நிலத்தைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்திருந்தாராம். செவ்வாய்க்கிழமை இரவு மின்சார வேலியில் மின்சாரம் செலுத்தியது மறதி ஏற்பட்டு, விளைநிலத்துக்கு சென்றாராம்.

அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட பொன்னுக்கண்ணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விளை நிலத்துக்கு சென்றவா் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி ரஞ்சனி கைப்பேசி மூலம் அழைத்துள்ளாா். அவா் அழைப்பினை எடுக்காமல் இருக்கவே சந்தேகம் ஏற்பட்டு அவரது மகன்களான சந்தோஷ், சஞ்சய் இருவரையும் அழைத்துக் கொண்டு விளைநிலத்துக்கு சென்றுள்ளாா். அப்போது அவா் உயிரிழந்து கிடந்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.