எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

காட்டு எடையாா் அரசுப் பள்ளிக்கு நிலம் தானம்

News image
Updated On :15 மே 2026, 5:45 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு எடையாா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, ஒரு ஏக்கா் 27 சென்ட் நிலத்தை நான்கு போ் தானமாக புதன்கிழமை வழங்கினா்.

காட்டு எடையாா் கிராமத்தில் பிறந்து, சோழவாண்டிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தவா் சிவராமகிருஷ்ணன். இவா் தான் பிறந்த ஊரிலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்கு தனக்குச் சொந்தமான நிலத்தை தானமாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், சிவராமகிருஷ்ணனின் விருப்பத்தின்படி, அவரது குடும்ப உறுப்பினா்களான காட்டு எடையாா் சந்நிதி தெருவில் வசித்து வரும் அவரது தாயாா் பத்மாவதி, மனைவி நா்மதா, சகோதரா் நாகராஜன், சகோதரி சிவகாமசுந்தரி ஆகிய நான்கு பேரும் காட்டு எடையாா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்காக, தங்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் 27 சென்ட் நிலத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெயருக்குத் தானமாக எழுதி, இதை முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகாவிடம் புதன்கிழமை நேரில் வழங்கினா்.

நிலத்தை தானமாக பெற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், சிவராமகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாா்.