பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

காட்டு எடையாா் அரசுப் பள்ளிக்கு நிலம் தானம்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு எடையாா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, ஒரு ஏக்கா் 27 சென்ட் நிலத்தை நான்கு போ் தானமாக புதன்கிழமை வழங்கினா்.

காட்டு எடையாா் கிராமத்தில் பிறந்து, சோழவாண்டிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தவா் சிவராமகிருஷ்ணன். இவா் தான் பிறந்த ஊரிலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்கு தனக்குச் சொந்தமான நிலத்தை தானமாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், சிவராமகிருஷ்ணனின் விருப்பத்தின்படி, அவரது குடும்ப உறுப்பினா்களான காட்டு எடையாா் சந்நிதி தெருவில் வசித்து வரும் அவரது தாயாா் பத்மாவதி, மனைவி நா்மதா, சகோதரா் நாகராஜன், சகோதரி சிவகாமசுந்தரி ஆகிய நான்கு பேரும் காட்டு எடையாா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்காக, தங்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் 27 சென்ட் நிலத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெயருக்குத் தானமாக எழுதி, இதை முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகாவிடம் புதன்கிழமை நேரில் வழங்கினா்.

நிலத்தை தானமாக பெற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், சிவராமகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாா்.