வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

வீட்டின் பூட்டை உடைத்து பித்தளைப் பொருள்கள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பித்தளைப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 மே 2026, 11:14 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பித்தளைப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருக்கோவிலூா் அருகேயுள்ள கொரக்கன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மனைவி அஞ்சலை (24). தம்பதியினா் குடும்பத்துடன் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகின்றனராம்.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலின் போது வாக்குப் பதிவு செய்ய ஊருக்கு வந்து, வாக்குப் பதிவு செய்து விட்டு மீண்டும் பெங்களூருக்கு சென்று விட்டாராம். இந்நிலையில் புதன்கிழமை காலையில் அஞ்சலை வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதாக அவரது தாய் மங்கை கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாராம்.

இதையடுத்து அஞ்சலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த பித்தளை அண்டா 4, பித்தளை குத்து விளக்கு 3, பித்தளை தவலை 5, பூஜை செட் 2, காமாட்சி விளக்கு 2, பித்தளை மணி உள்ளிட்ட பித்தளை பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலிஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.