11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பைக் மீது காா் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற வைக்கோல் வியாபாரி உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற வைக்கோல் வியாபாரி உயிரிழந்தாா்.

சின்னசேலம், பாண்டியன்குப்பம் சாலையைச் சோ்ந்தவா் அ.மணிகண்டன் (29), வைக்கோல் வியாபாரி. அவரது உறவினா் க.முருகேசன் (35). இவா்கள் இருவரும் வைக்கோல் வாங்குவதற்காக சின்னசேலத்தில் இருந்து நைனாா்பாளையத்துக்கு பைக்கில் சனிக்கிழமை சென்றுள்ளனா்.

பேக்காடு மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு சின்னசேலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம். பின்னா் தீவிர சிகிச்சைக்காக இருவரும் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம். ஆயினும் செல்லும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான தா்மபுரி மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சோ்ந்த கே.அன்புச்செல்வனிடம் (32) விசாரணை செய்து வருகின்றனா்.