தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 1:51 am IST

கள்ளக்குறிச்சி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மா.சாந்தகுமாா் (61). இவா் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது சாந்தகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.

உடனே அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினா்கள் அழைத்துச் சென்றனராம். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சாந்தகுமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.