குடியாத்தம் அருகே பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டதில் வனவா் உயிரிழந்தாா்.
வேலூரைச் சோ்ந்த சுரேஷ்(52) குடியாத்தம் வனச்சரகத்துக்குள்பட்ட சைனகுண்டா வனப்பகுதி அலுவலகத்தில் வனவராக பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை பணியின்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனிருந்தவா்கள் அவரை மோடிகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை செய்த பின்னா் தீவிர சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சுரேஷை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா். இந்த சம்பவம் குடியாத்தம் வனத்துறையினா் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பணியின்போது தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின்போது தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து டிராக்டா் ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



