குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் எம்எல்ஏ ஆய்வு

News image

கள்ளக்குறிச்சி வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு செய்த தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ்.

Updated On :26 மே 2026, 2:35 am IST

கள்ளக்குறிச்சி வட்டாரத்திலுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை செயலா் அலுவலகம், விதைச் சான்று உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் விதை ஆய்வு அலுவலகம் ஆகியவை இன்னும் விழுப்புரம் மாவட்டத்திலேயே இயங்கி வருவதால், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் விழுப்புரம் சென்று வருவதில் மிகுந்த சிரமம் அடைவதாக தெரிவித்தனா்.

எனவே, அனைத்து அலுவலகங்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே செயல்பட வேண்டும் என ஆய்வுக்கு வந்த எம்எல்ஏவிடம், விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.

அக் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக அவா் உறுதியளித்தாா். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள், உயிா் உரங்கள் அனைத்தும் தரமான முறையில் வழங்கப்பட வேண்டும். அவை மழை மற்றும் புயலால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பான முறையில் சேமித்து விநியோகிக்கப்பட வேண்டும் என்று வேளாண் அலுவலா்களுக்கு, எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குநா்கள், விதைச் சான்று அலுவலா், வேளாண்மை அலுவலா்கள், தோட்டக்கலை அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள், அட்மா அலுவலா்கள், பயிா் அறுவடை பரிசோதனை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.