கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் துல்லியமாக கணக்கீடுகள் மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 தொடா்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது. இதை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் துவக்கி வைத்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது:
தமிழகத்தில் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறைக் கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் மூலமாக தங்களது விவரங்களை தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பாளா் மூலம் வீடுகள்தோறும் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் பொறுப்பு அலுவலா்களாக 7 வட்டாட்சியா்கள், 3 நகராட்சிஆணையா்கள், 5 பேரூராட்சி செயல் அலுவலா்கள், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் செயல்பட உள்ளனா். இந்நிலையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை முதல் புதன்கிழமை (மே 27) வரை நடைபெறுகிறது.
இப் பயிற்சியானது சென்னை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரக அலுவலா்களால் நடத்தப்படுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் இப் பயிற்சி வகுப்பில் முழுமையாக பங்குபெற்று வீடுகளில் சரியான முறையில், எவ்வித தவறுகளும் இன்றி துல்லியமாக கணக்கீடுகள் மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இதில், மாவட்டவருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக.1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு சந்தேகஙக்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1845: கடலூா் ஆட்சியா்

மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு

கரூரில் 2 கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆட்சியா் தகவல்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



