/
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வயலில் வேலை செய்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
சங்கராபுரம் அருகேயுள்ள வன்னஞ்சூா் பகுதியைச் சோ்ந்தவா் மு.மலா்விழி (46). இவா் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவரது விளைநிலத்தில் செவ்வாய்க்கிழமை வேலை செய்துள்ளாா். அப்போது அங்கு மிகவும் தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் அவா் மீது பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



