எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மத்திய, மாநில அரசுகள் தடுக்கக்கோரி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 7:08 pm

தினமணி

 புதுச்சேரியில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மத்திய, மாநில அரசுகள் தடுக்கக்கோரி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். ஒப்பந்த ஊழியர்கள் சங்கத் தலைவர் முருகையன், மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், உதவி தலைவர் கொஞ்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். சினிமாவில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைத் தடை செய்ய வேண்டும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பெண்களுக்கு எதிராக குற்றச் செயலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.