: புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில், தமிழை மொழிப்பாடமாக எடுத்து முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை அங்கீகரிக்க வேண்டுமென்று புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதன் நிறுவனர் பெ.பராங்குசம் வெளிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்து, மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலையே அந்த அரசு வெளியிடுகிறது. இவர்களைவிட, பிறமொழிப்பாடம் மூலம் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், மாநில அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஆனால் புதுச்சேரி அரசு, தமிழ் அல்லாத பிறமொழிப் பாடம் எடுத்துப் படித்தவர்களையே, முதல் 3 இடங்களில் அறிவிக்கிறது. தமிழைத் தேர்ந்தெடுத்துப் படித்த மாணவர்களைப் புறந்தள்ளியிருக்கிறது.
புதுச்சேரி தவிர்த்து, பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியே பிரதானமாக, கட்டாயமாகக் கற்பிக்கப்படுகிறது. இனி வரும் ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தமிழை மொழிப்பாடமாகத் தேர்வு செய்தோரையே அங்கீகரிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


