ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுரியின் 11ஆவது பட்டமளிப்பு விழாவில், 1,340 மாணவர்களுக்கு பட்டங்களை,

News image
Updated On :29 நவம்பர் 2016, 3:20 am

தினமணி

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுரியின் 11ஆவது பட்டமளிப்பு விழாவில், 1,340 மாணவர்களுக்கு பட்டங்களை, மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் அனிஷா பஷீர்கான் வழங்கினார்.
 மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டில் படிப்பை நிறைவு செய்த 1340 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி துணைவேந்தர் அனிஷா பேசியதாவது:
 தற்போதைய காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம், சமுதாய வளர்ச்சியில் மாணவர்கள் பங்கு முக்கியமானதாகும். எனவே, தாங்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.
 கல்லூரி தலைவர் எம்.தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்வி.சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலர் கே.நாராயணசாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் கே.வெங்கடாசலபதி வரவேற்றார்.
 புதுச்சேரி பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை கைப்பற்றியவர்களுக்கு பரிசுத் தொகையாக 47 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.
 இயக்குநர் ராஜகோவிந்தன், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மலர்க்கண் உள்பட பலர் பங்கேற்றனர். கட்டடவியல் துறைத் தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.