ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ஜிப்மரில் மின்னணு வகுப்பறைகள்

ஜிப்மர் மருத்துவமனையில் மின்னணு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் இயக்குநர் (பொ) விஷ்ணு பட் தெரிவித்தார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:56 am

ஜிப்மர் மருத்துவமனையில் மின்னணு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் இயக்குநர் (பொ) விஷ்ணு பட் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  நாட்டிலுள்ள இதர மருத்துவக் கல்லூரிகளுடன் கல்வித் திட்டத்தைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக, ஜிப்மரில் மின்னணு வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. ஜிப்மரில் பயில முடியாத மாணவர்களுக்கு இது பயன் தரும். அதேநேரம், உயர்தரமான, ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவக் கல்வி பயில வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களும் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படும்.
தொலை மருத்துவக் கல்வி, அகன்ற இழைக்கற்றை இணையதள வசதி, தேசிய தகவல் மையம், புதுவை கிளை மூலம் தேசிய அறிவுசார் மையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஜிப்மரில் உள்ளது. இது தென்னிந்தியக் கல்வி மண்டல வள மையமாகத் திகழ்கிறது.
தேசிய மருத்துவக் கல்லூரிகளின் இணையதள சேவைத் திட்டத்தின் ஒரு அங்கமாக மின்னணு வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. இந்த வசதிகள் 2015-ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.