காவிரி மீட்பு நடைபயணத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்பேன் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த தமிழகம், புதுவை அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதற்கிடையே, தமிழக அரசு தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக, புதுவையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி கருத்துகள் கேட்கப்பட்டன. 26.3.18 அன்று சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி செயல்படாத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதற்கான கோப்பை ஆளுநருக்கு அனுப்பினோம். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால், மத்திய அரசை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்பு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் எனக் கூறி, கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். எனவே, தில்லி சென்று வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உறுதியளித்தபடி, அரசுக் கொறடா அனந்தராமன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். இந்த மனுவின் மீதான விசாரணை திங்கள்கிழமை (ஏப்.9) நடைபெற உள்ளது.
கர்நாடகத்தில் இருந்து பெறும் காவிரி நீரில் உரிய பங்கை காரைக்காலுக்கு தமிழகம் தருவதில்லை. இந்த விஷயத்தில் இரு மாநிலங்களும் புதுவையை வஞ்சிக்கின்றன. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும் எங்களுக்கு அதுபற்றிக் கவலையில்லை. புதுவை விவசாயிகளின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். அவர்களைக் காக்கும் கடமையும், பொறுப்பும் புதுவைக்கு அரசுக்கு உண்டு.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக திருச்சியில் இருந்து கடலூர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் வருகிற 11-ஆம் தேதி காரைக்காலுக்கு வருகிறார். அப்போது நானும், அமைச்சர் நமச்சிவாயமும், காரைக்காலைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனும் நடைபயணத்தில் பங்கேற்க உள்ளோம் என்றார் முதல்வர் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம்

இன்று நீட் தோ்வு: புதுச்சேரியில் தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
மும்பையை எளிதாக வீழ்த்தியது சென்னை!

கொளத்தூரில் சூறைக்காற்று: 20,000 வாழைமரங்கள் சேதம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

