குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு 

புதுவை சட்டப்பேரவையில் உள்ள அமைச்சரவை அலுவலகத்தில் முதல்வர் வே.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:42 am IST

புதுவை சட்டப்பேரவையில் உள்ள அமைச்சரவை அலுவலகத்தில் முதல்வர் வே.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
 புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை. இதனால் கோப்புகள் அதிகாரிகளின் அலுவலகங்களிலேயே பல நாள்களாக தேங்கிக் கிடக்கின்றன. அதனால், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆகிறது. இது குறித்து முதல்வர் நாராயணசாமியிடம் மக்கள் புகார் தெரிவித்தனர்.
 இதையடுத்து அடுத்து முதல்வர் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது செயலர்கள் உள்ளிட்ட 70 சதவீதம் பேர் வராதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தாமதமாக வருபவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
 அதனால், செவ்வாய்க்கிழமையாவது அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வருகிறார்களா? என முதல்வர் அலுவலகம் சார்பில் கண்காணிக்கப்பட்டது. முதல்வரின் ஆய்வுக்கு முழு பலன் கிடைக்காவிட்டாலும் ஓரளவு பலன் இருந்தது. அதாவது 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் 8.45க்கு வந்திருந்தனர். மேலும், 8.45 மணியை தாண்டிய நேரத்தில் பல ஊழியர்கள் பரபரப்புடன் சரியான நேரத்துக்கு இருக்கைக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக அவசர, அவசரமாக வந்தனர்.
 அதேநேரத்தில் முதல்வர் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் உள்ள அமைச்சரவை அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
 அங்கு பெரும்பாலான ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வந்திருப்பதைப் பார்த்து திருப்தியுடன் சென்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.