மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மின்வயரில் விழுந்த பட்டத்தை எடுத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து காயம்

புதுச்சேரியில் மின்வயரில் அறுந்து விழுந்த பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:22 am

தினமணி

புதுச்சேரியில் மின்வயரில் அறுந்து விழுந்த பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.
 புதுச்சேரி உருளையன்பேட்டை பிள்ளைத்தோட்டம், திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் பெருமாள். சலவைத் தொழிலாளி. இவரது மகன் ரகு (10). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமை ரகு, பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது நண்பர் கார்த்திக்குடன் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.
 அப்போது, பட்டம் அறுந்து மின் கம்பியில் விழுந்தது. உடனே ரகு அந்த பட்டத்தை எடுக்க முயன்றுள்ளார்.
 அப்போது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரகுவை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 இது குறித்து உருளையன்பேட்டை காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.