கிழக்கு கடற்கரைச் சாலை, ஜிப்மர், மூலக்குளம் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (பிப்.22) மின்தடை ஏற்படும் பகுதிகள்:
கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் ஜீவானந்தபுரம், பாக்கமுடையான்பட்டு, இசிஆர், கொட்டுப்பாளையம், லாஸ்பேட்டை, பெத்துசெட்டி பேட்டை, தாகூர் நகர், ராஜாஜி நகர், பாரதி நகர், புதுப்பேட்டை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 12.30 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
ஜிப்மர் பகுதியில் பாக்கமுடையன்பட்டு, கவிக்குயில் நகர், லட்சுமி நகர், கருவடிக்குப்பம், சாமி பிள்ளை தோட்டம், மகாவீர் நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
மூலக்குளம் பகுதியில் சண்முகாபுரம், மேட்டுப்பாளையம், ரமணபுரம், தட்சிணாமூர்த்தி நகர், சொக்கநாதன் பேட், கதிர்காமம், திலாசுபேட்டை, காந்தி நகர், கவுண்டன்பாளையம், ரத்னா நகர், ஆருத்ரா நகர், ஸ்ரீராம் நகர், சத்தியசாய் நகர், அம்பாள் நகர், நவசக்தி நகர், பேட்டையன் சத்திரம், விவிபி நகர் ஒரு பகுதி, திலகர் நகர், மோகன் நகர், எஸ்பிஐ காலனி, மணக்குள விநாயகர் நகர், குமரன் நகர், மூகாம்பிகை நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் (கிராமம் - வடக்கு) அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.