இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மாநில திருக்குறள் பேச்சுப் போட்டி

மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டி புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:47 am IST

மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டி புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 400 பேர் பங்கேற்றனர்.
ஃபாத்திமா மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டி நடைபெற்றது. நிறைவு விழாவில் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ப. பாலமுருகன் வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளி துணை முதல்வர் மார்டின் தீ குருஸ் பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டியானது 10 மையங்களில் நடத்தப்படுகிறது. புதுச்சேரி தவிர மதுரை, நெல்லை, திருவாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய நகரங்கங்களில் இப்போட்டி நடக்கிறது. 
சென்னை மையத்தில் ஏற்கனவே ஜூலை 21-ஆம் தேதி போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியானது இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இடைநிலைப் பிரிவில் 6, 7, 8 -ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள், மேல்நிலைப் பிரிவில் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள், கல்லூரிப் பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுப் போட்டியில் இடைநிலை பிரிவில் முதல் மூன்று இடங்களை பிரிதீக்கா, தயாநிதி, நவீன்குமார் ஆகியோர் பெற்றனர்.
மேல்நிலைப் பிரிவில் முதல் மூன்று இடங்களை தொல்காப்பியன், அருள்மொழி, தரணீஷ்வர் ஆகியோரும், கல்லூரி பிரிவில் முதல் மூன்று இடங்களை தினேஷ், கீர்த்தனா, கலைவாணி ஆகியோரும் பெற்றனர்.
முதல் சுற்று, அரை இறுதிச் சுற்று, இறுதிச் சுற்று என மூன்று நிலைகளாக பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. பத்து மையங்களிலும் நிகழ்ச்சி நாளன்று காலையில் முதல் சுற்றும், மாலையில் அரை இறுதிச் சுற்றும் நடைபெறும். இறுதிச் சுற்றானது, சென்னையில் அக்.6, 7 தேதிகளில் நடைபெறும்.
ஓவியப் போட்டியைப் பொறுத்தவரை, ஒரே சுற்றாக தேதிகளில் மண்டல அளவில் மட்டுமே நடத்தப்படும். இறுதிச் சுற்றில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே ரூ.10,000, 
ரூ. 7,500, ரூ. 5,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.