பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப்பணித் துறை அலுவலகம் முன் அரசுப் பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தர்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுவை பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஆயிரத்து 311 தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்படும் 16 நாள்கள் வேலையை 30 நாள்களாக உயர்த்தி வழங்க வேண்டும், மத்திய அரசின் குறைந்தபட்ச சட்டக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.398 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், தற்காலிக ஊழியர்களை முழுநேர தினக் கூலி ஊழியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள 14 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
அரசு பணியாளர் நல கூட்டமைப்புத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், குமரராஜ், அசோக்குமார், தேவநாதன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிகக் கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுரை!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பலி

லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


