பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாஹே: மார்க்சிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் கைது

மார்க்சிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 எதிரிகளை மாஹே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :14 மே 2018, 11:08 pm

DIN

மார்க்சிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 எதிரிகளை மாஹே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுவை மாநிலத்துக்குள்பட்ட மாஹே பிராந்தியம், பள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கனிபொழில் பாபு (45). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் ஆவார். கடந்த மே 7-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, கேரள எல்லைப் பகுதியில் பாஜக பிரமுகர் ஷமேஜ் கொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடைபெற்ற கம்யூனிஸ்ட், பாஜக பிரமுகர்களின் கொலைச் சம்பவங்களால் மாஹே மற்றும் அதையொட்டிய கேரள பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கனிபொழில் பாபு கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாஹே பிராந்தியம் கிழக்கு பள்ளியூரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் நிஜேஸை (34) போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், பண்ணூரை சேர்ந்த சுரேஷ் மகன் ஜெரின் சுரேஷ் (31), மாஹே பிராந்தியம் பந்தக்கால் அருகே சிவகங்கா கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சரத் (25) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என புதுவை மாநில சட்டம்- ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.