சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

புதுவை அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை இரு மடங்கு குறைந்துவிட்டது: அதிமுக குற்றச்சாட்டு

புதுவையில் அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதால், கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை இரண்டு மடங்கு குறைந்துவிட்டதாக அதிமுக குற்றச்சாட்டியது

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

புதுவையில் அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதால், கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை இரண்டு மடங்கு குறைந்துவிட்டதாக அதிமுக குற்றச்சாட்டியது.
 இது குறித்து புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 புதுவை நிதிநிலை அறிக்கையில் ரூ.600 கோடிக்கும் மேல் கல்விக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனாலும், கல்வியின் தரம் உயரவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 1.45 லட்சமாக இருந்தது. இது தற்போது 75 ஆயிரமாகக் குறைந்துவிட்டது.
 இதற்கு ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாததே முதல் காரணம். மாணவர்களுக்கு செயல்படுத்தி வந்த புத்தகப்பை, சீருடை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தவில்லை.
 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அந்தப் பள்ளிகள் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் பணியாற்றுவோருக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. பல நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பாக துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்தும் பயனில்லை.
 வெளிநாட்டில் படித்து வரும் மாணவி சோபியா, பொது இடத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில் அந்தக் கட்சியைப் பற்றி தரக்குறைவாக முழக்கம் எழுப்பியது கண்டிக்கத்தக்கதாகும்.
 புதுவை முதல்வர் நாராயாணசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் மாணவியின் செயலை நியாயப்படுத்தி பேசுகின்றனர். இதுவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதன் மூலம், அவர்கள் அரசியல் செய்கின்றனர்.
 சகிப்புத்தன்மை வேண்டும் எனக் கூறும் முதல்வர் நாராயணசாமி, ஆளுநரின் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.