நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை

கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. 

Updated On :23 ஜனவரி 2019, 8:52 am IST

கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. 
மும்பையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியே ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடல்வழி மற்றும் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோர காவல்படை நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. 
அதேபோல, புதுச்சேரியில் உள்ள கடலோர கிராமங்களில் 
"சீ விஜில்' என்ற தலைப்பிலான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதனால், புதுச்சேரி காலாபட்டிலிருந்து மூர்த்தி புதுக்குப்பம் வரை உள்ள 18 மீனவ கிராமங்களில் கடலோர பகுதியில் சட்டம்-ஒழுங்கு போலீஸார், கடலோர காவல்
படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
கடலுக்கு செல்பவர்கள், கடலில் இருந்து வருவோரை போலீஸார் தீவிர சோதனைக்குப் பிறகே அனுப்பி வைத்தனர். மேலும், மேற்கண்ட பகுதிகளில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையிலும், துப்பாக்கி ஏந்தி ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர். 
இதனிடையே, தவளக்குப்பம் நல்லவாடு பகுதியில் தீவிரவாதிகள் போல மாறுவேடத்தில் ஊடுருவிய, கடலோர காவல்படையைச் சேர்ந்த 2 பேரை புதுச்சேரி போலீஸார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் பிராங்கிளின், கார்த்திக் என்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.