இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை

கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. 

Updated On :23 ஜனவரி 2019, 8:52 am IST

கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. 
மும்பையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியே ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடல்வழி மற்றும் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோர காவல்படை நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. 
அதேபோல, புதுச்சேரியில் உள்ள கடலோர கிராமங்களில் 
"சீ விஜில்' என்ற தலைப்பிலான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதனால், புதுச்சேரி காலாபட்டிலிருந்து மூர்த்தி புதுக்குப்பம் வரை உள்ள 18 மீனவ கிராமங்களில் கடலோர பகுதியில் சட்டம்-ஒழுங்கு போலீஸார், கடலோர காவல்
படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
கடலுக்கு செல்பவர்கள், கடலில் இருந்து வருவோரை போலீஸார் தீவிர சோதனைக்குப் பிறகே அனுப்பி வைத்தனர். மேலும், மேற்கண்ட பகுதிகளில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையிலும், துப்பாக்கி ஏந்தி ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர். 
இதனிடையே, தவளக்குப்பம் நல்லவாடு பகுதியில் தீவிரவாதிகள் போல மாறுவேடத்தில் ஊடுருவிய, கடலோர காவல்படையைச் சேர்ந்த 2 பேரை புதுச்சேரி போலீஸார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் பிராங்கிளின், கார்த்திக் என்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.