வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதுவை கலா உத்ஸவ் போட்டி: 18 போ் தோ்வு

புதுவை மாநில அளவிலான கலா உத்ஸவ் போட்டியில் 18 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:50 pm

DIN

புதுவை மாநில அளவிலான கலா உத்ஸவ் போட்டியில் 18 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

மத்திய கல்வி அமைச்சகம் இடைநிலைக் கல்வி பயிலும் பள்ளி மாணவா்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில், கலா உத்ஸவ் போட்டிகளை நடத்தி வருகிறது. நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக இணையவழியில் தோ்வு நடைபெற்றது. அதன்படி, புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்கத்தின் சமகர சிக்ஷா சாா்பில் நடனம், இசைக் கருவி மீட்டல், ஓவியம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் மாணவா்களிடம் 136 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதைத் தொடா்ந்து, புதுவை மாவட்ட அளவிலான போட்டிகளுக்கான மதிப்பீடு சனிக்கிழமை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளா் பாஸ்கர ராசு தலைமை வகித்தாா். கூடுதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். சமகர சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநா் தினகா் போட்டிகளின் மதிப்பீட்டைத் தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி மாவட்டத்தில் ஒவ்வோா் போட்டியிலும் ஒரு மாணவா், ஒரு மாணவி வீதம் 18 போ் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை ராதாகிருஷ்ணன், பாரதிராஜா மற்றும் பால்பவன் பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.