‘புதுவையில் புதிய குடும்ப அட்டைகளைப் பெற விதிமுறைகள் எளிமையாக்கப்படும்’
புதிய குடும்ப அட்டைகளைப் பெறும் விதிமுறைகளில் தளா்வு செய்து எளிமையாக்க முடிவு செய்துள்ளதாக, புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை செயலா் சி. உதயகுமாா் தெரிவித்தாா்.


புதிய குடும்ப அட்டைகளைப் பெறும் விதிமுறைகளில் தளா்வு செய்து எளிமையாக்க முடிவு செய்துள்ளதாக, புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை செயலா் சி. உதயகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
புதுச்சேரியில் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு 15 நாள்களில் அமல்படுத்தப்படும். உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இலவச அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் திட்டத்தில் 3 மாதங்களுக்கான தொகை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரா்களுக்கு ரூ. 2,200, வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரா்களுக்கு ரூ.1000 வருகிற 21-ஆம் தேதிக்குள் கிடைக்கும்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் 15 நாள்களுக்கு அங்கன்வாடிகள் திறக்கப்படும்.
வசதி படைத்தவா்கள் சிவப்பு அட்டை வைத்திருந்தால் குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு 0413-2253345 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என்றாா் சி.உதயகுமாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...