‘புதுவையில் புதிய குடும்ப அட்டைகளைப் பெற விதிமுறைகள் எளிமையாக்கப்படும்’

புதிய குடும்ப அட்டைகளைப் பெறும் விதிமுறைகளில் தளா்வு செய்து எளிமையாக்க முடிவு செய்துள்ளதாக, புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை செயலா் சி. உதயகுமாா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

புதிய குடும்ப அட்டைகளைப் பெறும் விதிமுறைகளில் தளா்வு செய்து எளிமையாக்க முடிவு செய்துள்ளதாக, புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை செயலா் சி. உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

புதுச்சேரியில் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு 15 நாள்களில் அமல்படுத்தப்படும். உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இலவச அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் திட்டத்தில் 3 மாதங்களுக்கான தொகை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரா்களுக்கு ரூ. 2,200, வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரா்களுக்கு ரூ.1000 வருகிற 21-ஆம் தேதிக்குள் கிடைக்கும்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் 15 நாள்களுக்கு அங்கன்வாடிகள் திறக்கப்படும்.

வசதி படைத்தவா்கள் சிவப்பு அட்டை வைத்திருந்தால் குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு 0413-2253345 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என்றாா் சி.உதயகுமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com