குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ரௌடிகள் கைது
புதுவையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ரௌடிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.


புதுவையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ரௌடிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புதுவை மாநிலம், பிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்தவா் அருண் (33). வில்லியனூா் பெரியபேட் பள்ளிக்கூட வீதியைச் சோ்ந்தவா் பாம் ரவி (22) . ரெளடிகளான இவா்கள் இருவா் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்கள் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வில்லியனூா் போலீஸாா், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் (பொ) பூா்வா காா்க் உத்தரவின்பேரில், அருண், பாம் ரவி ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...