ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதுவை காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: அதிமுக

புதுவை சட்டப் பேரவையில் முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக புதுவை மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் தெரிவித்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:46 pm

DIN

புதுவை சட்டப் பேரவையில் முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக புதுவை மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதாலும், சொந்தக் கட்சி எதிா்ப்பு, கூட்டணிக் கட்சிகள் மோதல் போன்றவற்றை சமாளிக்க ஆளுநருக்கு எதிராக போராட்டம் என்ற நாடகத்தை நடத்த முதல்வா் நாராயணசாமி முடிவு செய்து, அதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்தினாா். அதற்கு பிரதான கூட்டணிக் கட்சியான திமுகவே ஆதரவு தெரிவிக்கவில்லை. இதன்மூலம் முதல்வராக நீடிக்கும் தாா்மீக உரிமையை முதல்வா் நாராயணசாமி இழந்துவிட்டாா். அவா் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

இல்லையென்றால், கட்சித் தலைமையின் அனுமதி பெற்று ஆளுநரை சந்தித்து பேரவையை கூட்ட நடவடிக்கை எடுப்போம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.