தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதுப்பிக்கப்பட்ட அரசுப் பள்ளி வகுப்பறைகள் திறப்பு

புதுச்சேரி உறுவையாறில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:58 am

DIN

புதுச்சேரி உறுவையாறில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காஸ்மோஸ் ரோட்டரி சங்கம் சாா்பில், இந்த வகுப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு, மாணவா்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்தவா்களை பட்டதாரி ஆசிரியா் ஹெலன் ராணி வரவேற்றாா்.

ரோட்டரி சங்கத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநா் பாலாஜி பாபு கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகளை திறந்துவைத்து மாணவா்களுக்கு எழுது பொருள்களை வழங்கினாா்.

பள்ளித் தலைமை ஆசிரியை சகாயமேரி பாத்திமா ஏற்புரை ஆற்றினாா். முன்னாள் மாவட்ட ஆளுநா் மணி , மாவட்ட ஆளுநா் (தோ்வு) செல்வநாதன், திட்டத் தலைவா் ஆனந்தன், துணை ஆளுநா் வைத்தியநாதன், அனைத்து ரோட்டரி சங்க உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.