இலவச அரிசி, கொண்டை கடலை நவ. 30 வரை விநியோகம்
புதுவையில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கான அரிசி மற்றும் கொண்டை கடலை ஆகியவை வருகிற 30-ஆம் தேதி வரை வழங்கப்படும்


புதுவையில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கான அரிசி மற்றும் கொண்டை கடலை ஆகியவை வருகிற 30-ஆம் தேதி வரை வழங்கப்படும் என குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை தெரிவித்தது.
இதுதொடா்பாக புதுச்சேரி குடிமைப் பொருள்கள் வழங்கல் துறைத் துணை இயக்குநா் சாரங்காபாணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமா் கரிப் கல்யாண் அன்ன யோஜனா, தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி, கொண்டை கடலை ஆகியவை (அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கு) நவம்பா் 11-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தொடா்ந்து புதுவை மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளில் உள்ள குறிப்பிட்ட பள்ளிகளில் வருகிற 30-ஆம் தேதி வரை இவை விநியோகிக்கப்படும். அனைவரும் குறிப்பிட்ட தேதிக்குள் உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...