நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மணல் திருட்டு: இருவா் கைது

புதுச்சேரி அருகே பைக்கில் மணல் திருடி வந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 நவம்பர் 2020, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே பைக்கில் மணல் திருடி வந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி வில்லியனூா் சங்கராபரணி ஆற்றங்கரையோரம், சேந்தநத்தம் மயானம் அருகே மணல் கடத்தப்படுவதாக வில்லியனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள மயானம் அருகே 4 போ் பைக்கில் மணலை திருடி வந்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டதைக் கண்டனா். அவா்களில் இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அவா்கள் ஆரியபாளையத்தைச் சோ்ந்த நந்தகோபால் (36), சதீஷ் (26) என்பதும், சேகரித்த மணலை சரக்கு வாகனத்தைப் பயன்படுத்தி வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும், சரக்கு வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.