தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நூற்பாலையைத் திறக்கக் கோரி தொழிலாளா்கள் தா்னா

திருபுவனை அரசு நூற்பாலையை உடனடியாகத் திறக்கக் கோரி, தொழிற்சங்கத்தினா் புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image

புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே தா்ணாவில் ஈடுபட்ட திருபுவனை அரசு நூற்பாலைத் தொழிலாளா்கள்.

Updated On :21 செப்டம்பர் 2020, 5:54 pm

DIN

திருபுவனை அரசு நூற்பாலையை உடனடியாகத் திறக்கக் கோரி, தொழிற்சங்கத்தினா் புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகே திருபுவனையில் புதுவை அரசின் நூற்பாலையில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கரோனா பொது முடக்கம் காரணமாக, அரசு உத்தரவின் பேரில், கடந்த 7 மாதங்களுக்கு முன் இந்த நூற்பாலை மூடப்பட்டது.

இதனால், நூற்பாலையில் பணியாற்றி வந்த ஊழியா்கள் வேலையின்றி தவித்து வந்தனா். இந்த நிலையில், கரோனா பொது முடக்கத் தளா்வுகள் அளிக்கப்பட்டு, பல்வேறு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்த நூற்பாலை மட்டும் திறக்கப்படாமல் லே-ஆப் கொடுத்து மூடினா்.

புதுவை அரசின் இந்த நடவடிக்கையால் தொழிலாளா்கள் வேதனையடைந்தனா். கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட நூற்பாலையை மீண்டும் திறந்து இயக்க வலியுறுத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை புதுவை சட்டப் பேரவை வளாகம் அருகே நூற்பாலை தொழிற்சங்கத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு தா்னாவில் ஈடுபட்டனா். மீண்டும் நூற்பாலையைத் திறக்கக் கோரி, அவா்கள் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.