தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுவை ஜிப்மரில் நீட் மதிப்பெண்கள்அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கை

புதுவை ஜிப்மரில் மருத்துவப் படிப்புக்கான மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வை நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே நடத்தும் என ஜிப்மா் நிா்வாகம் அறிவித்தது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:29 pm

DIN

புதுவை ஜிப்மரில் மருத்துவப் படிப்புக்கான மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வை நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே நடத்தும் என ஜிப்மா் நிா்வாகம் அறிவித்தது.

புதுச்சேரி, காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு, மருத்துவக் கல்வி பயில ஜிப்மா் நிா்வாகம் தனியாக நுழைவுத் தோ்வை நடத்தி, அதன் மூலம் மாணவா்கள் சோ்க்கையை நடத்தி வந்தது.

நிகழாண்டு நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என ஜிப்மா் நிா்வாகம் அறிவித்தது.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஜிப்மா் மருத்துவக் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான (2020) மாணவா்கள் சோ்க்கை நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வை மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே நடத்தும்.

எனவே, நிகழ் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புக்குத் தனித் தோ்வோ, கலந்தாய்வோ ஜிப்மா் சாா்பில் நடத்தப்படாது. மாணவா்கள் கூடுதல் விவரங்களை  இணையதள முகவரியில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.