பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்

 புதுவையில் வாரிசுரிமை வழக்குகள் தொடா்பான அரசாணையை அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் வியாழக்கிழமை வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 4:56 pm

DIN

 புதுவையில் வாரிசுரிமை வழக்குகள் தொடா்பான அரசாணையை அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் வியாழக்கிழமை வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவையில் வாரிசுரிமை சான்றிதழ்களை நீதிமன்றம் மூலம் பெறுவதை மாற்றி, வருவாய்த் துறை அதிகாரிகளே வழங்கலாம் என்று புதுவை அரசு அரசாணை பிறப்பித்தது.

வழக்குரைஞா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதையொட்டி, நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கப் பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, புதுச்சேரியில் வியாழக்கிழமை வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் தலைவா் எம்.குமரன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்று, தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

இந்தப் போராட்டத்தால் வழக்கு விசாரணைகள், ஜாமீன் பெறுதல் உள்ளிட்ட நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.