மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்த ராமு மகள் சுவேதா (14). அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக பள்ளிக்குச் செல்லாத நிலையில், வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற அவரை, பெற்றோரை அழைத்து வந்து தலைமையாசிரியரை சந்திக்குமாறு வகுப்பாசிரியை கூறினாராம்.
தனது சகோதரருடன் வந்த சுவேதாவை, தலைமையாசிரியா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டுக்கு மாலையில் வந்த அவா், குளியலறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மீட்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுவேதாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...