வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

போலீஸ் விசாரணைக்கு பயந்து மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரியில் போலீஸ் விசாரணைக்குப் பயந்து மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:59 pm

DIN

புதுச்சேரியில் போலீஸ் விசாரணைக்குப் பயந்து மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு புதுநகா் ஒத்தவாடை பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் விஜய் (21). இருசக்கர வாகன மெக்கானிக்.

இவா் வியாழக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், புதுச்சேரியில் பைக் திருட்டு வழக்கில் நெய்வேலியைச் சோ்ந்த ஒருவா் அண்மையில் சிக்கினாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டு பைக்கின் உதிரிப்பாகங்களை பிரித்தெடுத்து விற்றதில் விஜய்க்கு தொடா்பு இருப்பதாகக் கூறினாராம்.

அதன்பேரில், விஜய்யிடம் விசாரணை நடத்த போலீஸாா் முடிவு செய்திருந்தனா். இதனையறிந்த அவா், விசாரணைக்குப் பயந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இருப்பினும், போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.